செய்திகள்

கந்துவட்டி கொடுமைக்கு தாய்-மகன் தற்கொலை

Published On 2018-07-31 10:12 GMT   |   Update On 2018-07-31 10:12 GMT
திண்டுக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது68) விவசாயி. இவரது மனைவி சரோஜா (65). இவர்களுக்கு மனோகரன் (41) என்ற மகன் உள்ளார்.

இவர் வெள்ளமடத்துப்பட்டியை சேர்ந்த நாகராஜ், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த கோபி, சின்னத்துரை ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தார்.

தான் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திரும்ப செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு 3 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனோகரன் இறந்தபிறகும் சின்னச்சாமி மற்றும் அவரது மனைவியிடம் கடன் தொகையை தருமாறு 3 பேரும் மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரோஜா வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சின்னச்சாமி கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கந்து வட்டி கொடுமை சட்டத்தின்கீழ், நாகராஜ், கோபி, சின்னத்துரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News