செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்

Published On 2018-07-30 07:31 GMT   |   Update On 2018-07-30 07:31 GMT
ஆண்டிப்பட்டி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். #arrestcase

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகண்ணன் (வயது26), மறவபட்டியை சேர்ந்வர் அய்யர்சாமி (27) கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

எனவே முன்விரோதம் தொடர்ந்து வந்தது. சம்பவத்தன்று அய்யர்சாமி மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்தகண்ணன் மற்றும் அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆனந்தகண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யர்சாமி, ஜெயகாந்தன், ஆதி, பசும்பொன் ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் அய்யர்சாமி கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தகண்ணனின் நண்பர் சதுரகிரி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய பிரகாஷ், சிவக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News