செய்திகள்

மதுரை தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 1/2 லட்சம் மோசடி

Published On 2018-07-29 10:32 GMT   |   Update On 2018-07-29 10:32 GMT
தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 1/2 லட்சம் கடன் பெற்று திருப்பித்தராமல் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை வசந்தநகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த யோகேந்திரன் போலி ஆவணங்கள் மூலம் பலரது பெயரில் எங்கள் நிதி நிறுவனத்தில் ரூ.3 1/2 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பிச்செலுத்த மறுத்து வருகிறார்.

இவருக்கு உடந்தையாக திண்டுக்கல் மாவட்டம், முத்தணம்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வடமதுரை கண்ணன், திண்டுக்கல் அருள்பிரபு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் செயல்படும் தனியார் ஜவுளி நிறுவன மேலாளர் பாலகுரு, எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், தனது நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிய நேரு நகர் ஜீவானந்தம் மனைவி மகேஸ்வரி கடந்த 20-6- 2018 முதல் 2-7-2018 வரையிலான வருமானத்தை கணக்கில் காட்டாமல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News