செய்திகள்

சாயல்குடியில் கடையை உடைத்து ரூ.85 ஆயிரம் கொள்ளை

Published On 2018-07-28 09:33 GMT   |   Update On 2018-07-28 09:33 GMT
சாயல்குடியில் கடையை உடைத்து ரூ.85 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ராமநாதபுரம்:

சாயல்குடி அருகே உள்ள எஸ்.உறைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காசிராஜா (வயது 28). இவர் மூக்கையூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் காசிராஜா கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த அவர், கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன. இதனால் கொள்ளை நடந்திருப்பது தெரியவர, சாயல்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாரதா மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். கடையில் இருந்த ரூ.85 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக காசிராஜா போலீசாரிடம் தெரிவித்தார்.

கடைக்குள் புகுந்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News