செய்திகள்
கோவில்பட்டியில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொம்பையா தலைமை வகித்தார். தாஸ், கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகன், நகர தலைவர் முருகன், சி.ஐ.டி.யு. துணை தலைவர் மோகன்தாஸ், நகர மார்க்சிஸ்ட் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். #tamilnews
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொம்பையா தலைமை வகித்தார். தாஸ், கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகன், நகர தலைவர் முருகன், சி.ஐ.டி.யு. துணை தலைவர் மோகன்தாஸ், நகர மார்க்சிஸ்ட் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். #tamilnews