செய்திகள்
காயல்பட்டினத்தில் பைக் மோதி பெண் படுகாயம்
காயல்பட்டினத்தில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்த மூக்காண்டி மனைவி அன்னலட்சுமி (வயது 65). இவர் வீடுகளில் வேலை செய்து வருபவர். நேற்று வேலைக்கு செல்வதற்காக திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
தனியார் அறக்கட்டளை மருத்துவமனை அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அன்னலட்சுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.