செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் கஞ்சா விற்ற ரவுடி உள்பட 3 பேர் கைது

Published On 2018-07-24 09:05 GMT   |   Update On 2018-07-24 09:05 GMT
சென்னை எம்ஜிஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போரூர்:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரைச் சேர்ந்த தினேஷ், கணேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்கு மற்றும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பிரபல ரவுடியான சின்ன சிவாவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News