செய்திகள்
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் பணம் கொள்ளை
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.டி.சி.நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 62). ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர். இவருடைய மனைவி டல்சி எலிசபெத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தனது மூத்த மகனின் குழந்தையை பார்ப்பதற்காக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேலிடம் தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 வெளிநாட்டு கேமராக்கள், 2 கைக்கெடிகாரங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கே.டி.சி.நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 62). ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர். இவருடைய மனைவி டல்சி எலிசபெத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தனது மூத்த மகனின் குழந்தையை பார்ப்பதற்காக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேலிடம் தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 வெளிநாட்டு கேமராக்கள், 2 கைக்கெடிகாரங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.