செய்திகள்

செட்டிப்பாளையம் அருகே கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் நகைகள் திருட்டு

Published On 2018-07-22 11:38 GMT   |   Update On 2018-07-22 11:38 GMT
செட்டிப்பாளையம் அருகே கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது 60). கார் விற்பனை பிரதிநிதி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் ஜவுளி எடுக்க சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கோமதிநாயகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 9½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து கோமதி நாயகம் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News