செய்திகள்

மேட்டூர் அருகே காவிரியில் குளித்த 5 பேரில் 4 பேர் உடல்கள் மீட்பு - ஒருவரை தேடும் பணி தீவிரம்

Published On 2018-07-22 10:02 GMT   |   Update On 2018-07-22 10:02 GMT
சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. #Cauvery #Mettur
சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது.

தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடினர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. வாணிஸ்ரீ, மைதிலி சரவணன், ரவீனா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மாயமான ஹரிஹரனை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என கடலோர மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம எனவும் தெரிவித்துள்ளார். #Mettur #Cauvery
Tags:    

Similar News