செய்திகள்

திருச்செந்தூர் அருகே வி‌ஷ வண்டுகள் கடித்து கூலித்தொழிலாளி பலி

Published On 2018-07-19 13:25 GMT   |   Update On 2018-07-19 13:25 GMT
திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை வி‌ஷ வண்டுகள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது52). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள வன்னியராஜா கோவில் அருகே தனியார் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி இவர் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.

இதில் அப்பகுதியில் நின்ற மரத்தில் இருந்து வி‌ஷ வண்டு கூடு கீழே விழுந்தது. கூட்டில் இருந்த வி‌ஷ வண்டுகள் முருகேசனை சரமாரியாக கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் முருகேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி திருச்செந்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான முருகேசனுக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News