செய்திகள்

முதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2018-07-19 12:24 GMT   |   Update On 2018-07-19 12:24 GMT
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகன் நாகராஜ் (வயது37). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் முதுகுளத்தூருக்கு புறப்பட்டார்.

முதுகுளத்தூர் மின் வாரிய அலுவலக ரோட்டின் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News