செய்திகள்

நொய்யல் பகுதிகளில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

Published On 2018-07-18 11:42 GMT   |   Update On 2018-07-18 11:42 GMT
உற்பத்தி அதிகரிப்பால் நொய்யல் பகுதிகளில் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஒரம்பு பாளையம், நல்லிக்கோவில் திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னை பயிரிட்டு உள்ளனர்.

இதில் விளையும் தேங்காய்களை உடைத்து அதில் உள்ள தேங்காய் பருப்புகளை நன்கு உலர வைத்து வாரத்தில் திங்கட்கிழமைகளில் செயல்படும் சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர். ஏலம் எடுக்க தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் அதே போல் எண்ணெய் நிறுவனங்களில் இருந்தும் ஏஜெண்ட்கள் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் வியாபாரிகள் தேங்காய் களை லாரிகள் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை தேங்காய் பருப்பு ரூ.10,300-க்கு வாங்கி சென்றனர். இந்த வாரம் 100 கிலோ கொண்ட தேங்காய் பருப்பு ரூ.9 ஆயிரத்துக்கு வாங்கி சென்றனர். தேங்காய் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News