செய்திகள்
செங்கம் மான் வேட்டையாடிய 2 பேர் கைது
செங்கம் அருகே மான் வேட்டையாடி 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சின்னபையன் (வயது 58) மற்றும் ஏழுமலை(36) ஆகிய இருவரும் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடியுள்ளனர்.
மேலும் வேட்டையாடிய மானை வெட்டி சுமார் 20 கிலோ மான் கறியை சாக்கு பையில் கட்டி மோட்டார் சைக்கிளில் கொணடு சென்றனர். இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிஞ்சூர் காடு அருகே மான் கறியை பைக்கில் கொண்டு வந்த சின்னபையன் மற்றும் ஏழுமலை ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த சுமார் 20 கிலோ மான் கறியையும், நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யபட்டது. மேலும் இது குறித்து விசாரனை செய்யப்பட்டு வருகிறது.