செய்திகள்

விழுப்புரம் அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் தீ பிடித்து எரிந்தது

Published On 2018-07-18 10:12 GMT   |   Update On 2018-07-18 10:12 GMT
விழுப்புரம் அருகே தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், டிராக்டரின் டயர்களும் தீ பிடித்து எரிந்தது.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஏழுசெம்பொன் நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 54). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதற்கு தீவனம் வாங்குவதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்தார்.

அங்கு வைக்கோல் கட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தனது வயல் அருகே டிராக்டரை ஓட்டிசென்றபோது மேலே தாழ்வாக சென்ற மின்சார வயர் வைக்கோல் மீது ஒரசி தீ பிடித்தது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவத்தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வைக்கோல் கட்டுகளும், டிராக்டரின் டயர்களும் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் எரிந்து நாசமானது.
Tags:    

Similar News