செய்திகள்

கபிஸ்தலம் அருகே கார் மோதி கணவர் பலி - மனைவி படுகாயம்

Published On 2018-07-13 10:22 GMT   |   Update On 2018-07-13 10:22 GMT
கபிஸ்தலம் அருகே கார் மோதி கணவர் பலியானர். மனைவி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள அய்யம்பேட்டை ரெயிலடி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜீ (வயது 38). இவரது மனைவி கனகா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ராஜீவும், கனகாவும் மோட்டார் சைக்கிளில் திருவையாறு அருகே திங்களூரில் உள்ள சந்திரன் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு சோமேஸ்புரம் பஸ்நிலையம் அருகில் சென்ற போது திருவையாறில் இருந்து வேகமாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ராஜீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கனகா படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.

இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கனகாவை மீட்டு அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று கார் மோதி பலியான ராஜீ உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய காரை தேடி வருகின்றனர். விபத்தில் மனைவி கண்முன்பு கணவன் பலியான சம்பவம் கபிஸ்தலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.

Tags:    

Similar News