செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2018-07-11 10:41 GMT   |   Update On 2018-07-11 10:41 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அவர்கள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதே வழியில் தற்போதைய அரசும் செயல்படுகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறியதாக தெரிகிறது. இந்த கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். அவ்வாறு மத்திய அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமேயானால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #RajivGandhi #Perarivalan #TNMinister #KadamburRaju
Tags:    

Similar News