செய்திகள்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக எலுமிச்சை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்:
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விற்பனை மந்தமானது. இதனால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் எலுமிச்சை கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து கூடி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விற்பனை மந்தமானது. இதனால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் எலுமிச்சை கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து கூடி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.