செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ. 62 லட்சம்

Published On 2018-07-03 16:03 GMT   |   Update On 2018-07-03 16:03 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் காணிக்கையாக ரூ.62 லட்சம் கிடைத்தது.
சாத்தூர்:

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலும் ஒன்று.

இங்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் உண்டியல் திறக்கப்படும். ஆனால் கடந்த ஒரு மாதம் உண்டியல் திறக்காததால் நேற்று அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு, பொருட்கள் கணக்கிடப்பட்டன.

அதில் ரொக்கமாக 62 லட்சத்து 94 ஆயிரத்து 974 ரூபாய், தங்கம் 310 கிராம், வெள்ளி 980 கிராம் கிடைத்தது. பணம் எண்ணிக்கையில் துலுக்கப்பட்டியை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

மடப்புரம் கோவில் ஆணையர் (பொறுப்பு), செல்வி, பரமக்குடி கோவில் ஆணையர் ராமசாமி, பரம்பரை அறங்காவலர்கள், மற்றும் ஆய்வாளர்கள், வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டனர்.
Tags:    

Similar News