செய்திகள்

திருமங்கலம்-கல்லுப்பட்டியில் டிரைவர்- தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

Published On 2018-07-03 10:25 GMT   |   Update On 2018-07-03 10:25 GMT
திருமங்கலம்-கல்லுப்பட்டியில் டிரைவர்- தொழிலாளி மீது சரமாரி தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 26), டேங்கர் லாரி டிரைவரான இவருக்கும், தும்மக்குண்டை சேர்ந்த பாபு (31) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று கப்பலூர் லாரி நிறுத்தத்தில் ஆனந்த ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரத் குமார், கணேஷ் ஆகியோர் ஆனந்தராஜை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, சரத்குமார், கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விநாயகப் பெருமாள் (42). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மொசைக் கண்ணன் என்பவரது வீட்டில் கொட்டகை அமைக்க சென்றார்.

அப்போது விநாயகப் பெருமாளுக்கும், மொசைக் கண்ணனுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மொசைக் கண்ணன், அவரது உறவினர்கள் செல்வம், தவக்குமார் ஆகிய 3 பேர் தன்னை கட்டி வைத்து தாக்கியதாக விநாயகப் பெருமாள் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்

Tags:    

Similar News