செய்திகள்
3 மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் கார்டு ரத்து இல்லை - அமைச்சர் காமராஜ் தகவல்
நியாய விலை கடைகளில் 3 மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் கார்டு ரத்து இல்லை என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டசபையில் இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. (தி.மு.க) பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற உணவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு செய்தியை வெளியிட்டதாக அறிகிறேன்.
3 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய மாநில அரசு முனைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். கட்டிட தொழிலாளர்கள், சாலை பணியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்கு செல்பவர்கள், 2, 3 மாதம் கழித்துதான் மீண்டும் சொந்த கிராமத்துக்கு செல்கிறார்கள்.
மத்திய மந்திரி அறிவிப்பால் இதுபோன்ற தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டை கொண்ட பொது வினியோக திட்டத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவை மாநில அரசு பின்பற்ற கூடாது என்றார்.
இதற்கு அமைச்சர் ஆர்.காமராசு பதில் கூறியதாவது:-
ரேஷன் கார்டு பற்றி மத்திய மந்திரி கூறியது ஒரு அறிவுரையாகதான் கூறி இருக்கிறாரே தவிர அது கொள்கை முடிவு அல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3, 4, 5 மாதங்கள் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அந்த கார்டுகள் நிறுத்தப்படுவது கிடையாது. எப்போது வந்தாலும் பொருட்கள் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளியூர் சென்றவர்கள் திரும்பி வரும்போது மறுபடியும் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம் என்று ரிஜிஸ்டர் செய்து கொண்டால் அவர்களுக்கு பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைதான் வருங்காலத்திலும் தமிழக அரசு பின்பற்றும் என்றார்.
மா.சுப்பிரமணியம்:- சைதாப்பேட்டை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு அதே பகுதியில் நியாய விலை கடை அமைக்கப்படுமா? என்றார்.
இதற்கு அமைச்சர் ஆவனம் செய்யப்படும் என்றார். #MinisterKamaraj #RationCard
சட்டசபையில் இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. (தி.மு.க) பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற உணவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு செய்தியை வெளியிட்டதாக அறிகிறேன்.
3 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய மாநில அரசு முனைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். கட்டிட தொழிலாளர்கள், சாலை பணியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்கு செல்பவர்கள், 2, 3 மாதம் கழித்துதான் மீண்டும் சொந்த கிராமத்துக்கு செல்கிறார்கள்.
மத்திய மந்திரி அறிவிப்பால் இதுபோன்ற தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டை கொண்ட பொது வினியோக திட்டத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவை மாநில அரசு பின்பற்ற கூடாது என்றார்.
இதற்கு அமைச்சர் ஆர்.காமராசு பதில் கூறியதாவது:-
ரேஷன் கார்டு பற்றி மத்திய மந்திரி கூறியது ஒரு அறிவுரையாகதான் கூறி இருக்கிறாரே தவிர அது கொள்கை முடிவு அல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3, 4, 5 மாதங்கள் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அந்த கார்டுகள் நிறுத்தப்படுவது கிடையாது. எப்போது வந்தாலும் பொருட்கள் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மா.சுப்பிரமணியம்:- சைதாப்பேட்டை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு அதே பகுதியில் நியாய விலை கடை அமைக்கப்படுமா? என்றார்.
இதற்கு அமைச்சர் ஆவனம் செய்யப்படும் என்றார். #MinisterKamaraj #RationCard