search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration card"

    • சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழக அரசால் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

    மகளிர் உரிமை தொகை தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் புதிய ரேசன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. உணவு வழங்கல் துறை புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை. புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

    இதே போல் தனி குடும்ப அட்டைக்காக ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். பெற்றோருடன் வசித்த குடும்பங்கள் தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எவ்வித பணியும் கடந்த 5 மாதமாக மேற்கொள்ளப்படவில்லை.

    சென்னையில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் புதிய ரேசன் கார்டுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேசன் கார்டு அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி 3 மாதங்கள் ஆகிய நிலையில் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகளை தொடர முடியாமல் உணவு பொருள் வழங்கல் துறையின் வெப்சைட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு 5 மாதமாக நடைபெறவில்லை. துறையில் உள்ள அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன் கள ஆய்வு பணிகள் தொடங்கும். இணைய தளம் வழியாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேசன் கார்டு வழங்குவதற்கான ஆய்வு பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசியை வழங்குகிறது. அந்த அரிசியை பெறும் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களை புதுப்பிக்க 'இ.கே.ஒய்.சி.' என்ற இணைய வழியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ரேஷன் கார்டு உள்ள அனைத்து உறுப்பினர்களும் பொது வினியோக திட்ட அங்காடியில் உள்ள கருவி மூலம் கைரேகை பதிவுகள் மூலம் தங்களின் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுநடைமுறைப்படுத்தப்பட்டு 45 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

    குடும்ப உறுப்பினர்களுக்கு இடையூறு இன்றி இந்த பணியைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ, பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்க கூறப்பட்டு இருந்தது.

    சில இடங்களில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும் என தவறுதலாக தகவல்கள் வந்தன. உடனே அப்படி செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டது. கார்டுதாரர்கள் அவர்களுடைய வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ரேஷன் கார்டுகள் இதனால் ரத்து செய்யப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒம்சக்தி சேகர் வலியுறுத்தல்
    • 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே முதன் முறையாக சிலிண்டர் மானியம் சிகப்பு அட்டைக்கு ரூ.300 மற்றும் மஞ்சள் அட்டைக்கு ரூ.150 என்று புதுவை முதல்-அமைச்சர் அறிவித்த திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. மானியம் பெற நுகர்வோரின் கியாஸ் இணைப்பு தொடர்பான தகவல்களை இணையதள வாயிலாகவும் சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனங்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ள புதுவை அரசு அறிவித்து உள்ளது.

    புதுவை மாநிலத்தில் ஆரம்ப காலத்தில் கியாஸ் இணைப்பு வழங்கும்போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு இணைப்பு என்று குடும்ப தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

    பின்பு எரிவாயு இணைப்பு வழங்குவது எளிமையாகி அனை வருக்கும் சிலிண்டர் கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு இணைப்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் மனைவி பெயரில் மற்றொரு இணைப்பை பெற்றனர்.

    புதுவை மாநிலத்தில் 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.

    இப்போது அரசின் மானியம் பெற பதிய முற்படும் போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பெயர் மட்டுமே பதிய முடியும் என்ற நிலை உள்ளது.இதனால் கியாஸ் மானிய திட்டம் முழுமை அடையாமல் போக கூடிய நிலை உள்ளது.

    எனவே ஒரே குடும்ப அட்டையில் 2 இணைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இருந்தால் இருவருக்கும் மானியம் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். இது போன்ற சிலிண்டர் மானியம் வழங்குவதில் உள்ள குறைகளை களைந்து திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதிய ரேஷன் கார்டுகள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது.
    • தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டாலும், அதற்கு உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் குடும்ப அட்டைகள் கொண்டு ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக திருமணமானவர்கள் அல்லது உடன் இருந்தவர்கள் யாரேனும் இறந்தாலோ அவர்களில் பெயர் நீக்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய ரேஷன்கார்டுகள்

    புதிய ரேஷன் கார்டுகள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளின் ஊழியர்கள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பழைய குடும்ப அட்டைகளில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் புதிய அட்டைகள் வேண்டி ஆன்லைன் மூலம் பதிந்து பல மாதங்கள் காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால், தங்களுக்கு இன்னும் குடும்ப அட்டைகள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அது குறித்து ஏதும் தகவல் தேவை என்றால் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்குமாரும் வலியுறுத்தி வருகின்றனர். தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டாலும், அதற்கு உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.

    பொதுமக்கள் கோரிக்கை

    தற்போது குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான தகவல் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் அதன் காரணமாகத்தான் புதிய குடும்ப அட்டைகள் இன்னும் வழங்கப்படவில்லையோ என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. எனவே இதனை உடனடியாக தென்காசி மாவட்ட கலெக்டர் தலையிட்டு புதிதாக குடும்ப அட்டை வேண்டி பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்பவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்யலாம். இவற்றுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் குடியிருப்பு முகவரிக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழில் தேவையானவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

    இதுதவிர ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

    பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு 9342471314 என்ற நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

    • அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
    • ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.
    • உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த மே 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

    இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

    இதற்கான பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதிலும் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். சமையலறை ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா, அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா? என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர்.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும்.

    இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய கார்டு கிடைப்பதில் 3 மாதம் தள்ளிப்போகிறது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

    ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

    அதனால்தான் சமையலறை எத்தனை உள்ளது? எத்தனை சிலிண்டர் இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது? என்ற விவரங்களை சரிபார்க்க சொல்லி உள்ளோம்.

    இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • கட்டணமாக மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    புதிய மின்னணு அட்டைகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல் அலுவலகங்கள் மூலமாக பயனாளிகள் பெற்று வருகின்றனர்.

    உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும், நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும், இந்திய தபால் துறையின் மூலம் பயனாளிகளின் இருப்பி டத்திற்கு, பயனாளிகளின் விண்ணப்பத்தின் பேரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படுகிறது.

    புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டையினை தங்களின் இருப்பிடத்திலலேயே பெற விருப்பம் தெரிவிக்கும் பயனாளி களிடம் அஞ்சல் கட்டணம் வசூலித்து நகல் ரேசன் அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பயனாளி கள் புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் ரேசன் அட்டைக்கு விண்ணப்பி க்கும் போது ரேசன் அட்டையினை தபாலில் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிக்க www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் பேரில் பயனாளிக்கு தபால் மூலம் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கான தபால் கட்டணம் புதிய ரேசன் அட்டைக்கு ரூ.25ம், நகல் அட்டைக்கு கட்டணம் ரூ.20, தபால் கட்டணம் ரூ.25 என மொத்தம் 45 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியாக பெற விருப்பம் இல்லாத நபர்களுக்கு தற்போதைய நடைமுறைப்படியே குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 210 பயனாளிகள் ரேசன் அட்டையில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அஞ்சல் வழியாகவே புதிய திருத்தம் செய்யப்பட்ட மின்னணு நகல் அட்டையினை பெற விருப்பம் தெரிவித்து கட்டணம் செலுத்தி இருந்தனர். அவர்களுக்கான புதிய மின்னணு அட்டைகள் வரப்பெற்று தபால் அலுவலகம் வாயிலாக பயனாளிகளின் முகவரிக்கு அனுப்பும் நடைமுறையினை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தபால் துறை விற்பனை மேலாளர் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப கார்டு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உஷாபொன்னி வளவன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ் வரவேற்றார்.

    இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு முகாமிலேயே உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    ஊராட்சி செயலர் சத்தியா, ரேசன் கடை ஊழியர் ஜெகதீஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் வட்டம் அரும்பாக்கம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம் பருத்திமேனி குப்பம் நியாய விலைக்கடை, பூந்தமல்லி வட்டம் கொரட்டூர் நியாய விலைக்கடை அருகிலும், திருத்தணி வட்டம் ராமகிருஷ்ணாபுரம் நியாய விலைக்கடை, பள்ளிப்பட்டு வட்டம் ஈச்சம்பாடி நியாய விலைக்கடை, பொன்னேரி ஆரணி-1 வட்டம் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு, கும்மிடிப்பூண்டி வட்டம் குருவாட்டுச்சேரி நியாய விலைக்கடை, ஆவடி வட்டம் திருநின்றவூர் 'அ' கிராமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை, ஜனகராஜ குப்பம் நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெற்றனர்.

    • ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
    • புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து கலெக்டர் ஒப்புதலுடன் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக பிப்ரவரி மாதம் வரை நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் அச்சிட்டு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலர்கள் கூறியதாவது:- 4 மாதம் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்திலேயே கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டு ள்ளது.விண்ணப்பங்களை பரிசீலித்து ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இடைவெளியில் நிர்வாக ஒப்புதல் பெற்று புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிலுவை விண்ணப்பம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் துவங்கி உடனுக்குடன் கார்டு அச்சிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருமணமாகி ஒரே குடும்பமாக வசிப்பவர்கள், தனியாக ரேஷன் கார்டு பெறக்கூடாது. பழைய கார்டில் பெயர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுக்குடும்பமாக வசிப்பவர் கார்டு பெறுவதை தடுக்கவே புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் கியாஸ் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். பலகட்ட சரிபார்ப்புக்கு பிறகே பயனாளிகளாக தேர்வு செய்து கலெக்டர் ஒப்புதலுடன் கார்டு அச்சிட்டு வழங்குவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×