செய்திகள்
பல்வேறு கட்சியில் இருந்து விலகி அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் 22 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
பாஜக ,நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 22 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
திருச்செந்தூர்:
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் வாழவல்லான் மகாராஜன் ஏற்பாட்டில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செந்நெல்மாநகர், கொற்கை, மாரமங்கலம், மொட்டத்தான்விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா, நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 22 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
புதிதாக இணைந்தவர்களை அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல் .ஏ .சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட வக்கீல்அணிதுணை அமைப்பாளர் கிருபாகரன், முன்னாள் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ், கந்தன், பரமன்குறிச்சி இளங்கோ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.