செய்திகள்

திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை கொள்ளை

Published On 2018-06-29 06:29 GMT   |   Update On 2018-06-29 06:29 GMT
திருவள்ளூர் அருகே ஆசிரியை வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, தனியார் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டி வெளியே சென்றனர். மாலையில் ஆசிரியை தமிழரசி வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News