செய்திகள்

விழுப்புரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2018-06-27 16:41 GMT   |   Update On 2018-06-27 16:41 GMT
விழுப்புரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:

உலக போதை பொருள் ஒழிப்பு தினமான நேற்று, விழுப்புரத்தில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை ஆகியன இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார், பயிற்சி காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News