ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம் - தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ராஜபாளையம்:
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு குமாரசாமிராஜா நூற்றாண்டு திருமண மண்டப கமிட்டி, டவுண் லைன்ஸ் சங்கம், அலையன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச பொது மருத்துவ முகாமை ராஜபாளையத்தில் நடத்தியது.
சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினார்.மண்டப கமிட்டித் தலைவர் ராம்சிங், டவுண் லைன்ஸ் சங்கத் தலைவர் கணேசன், அலையன்ஸ் ஆளுநர் சுமதி ரங்கன், இயக்குனர் திவ்யா ரங்கன் முன்னிலை வகித்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் மற்றும் டாக்டர் குமரேசன் தலைமையிலான மருத்தவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் முகாமில் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பச்சமடம் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.