செய்திகள்

வேலூரில் பாலாற்றில் முதியவர் பிணம்

Published On 2018-06-19 11:24 GMT   |   Update On 2018-06-19 11:24 GMT
வேலூரில் பாலாற்றில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் பாலாற்றில் பழைய பாலத்திற்கு அடியில் 15-வது தூண் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவலறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீவார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

இறந்த முதியவர் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அவரது வேஷ்டி அவிழ்ந்து கிடந்தது. முதியவர் யார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

போலீசார் உடலை கைபற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலாற்றில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News