செய்திகள்

வெம்பாக்கம் அருகே தந்தை-மகனுக்கு வெட்டு - வாலிபர் கைது

Published On 2018-06-19 11:13 GMT   |   Update On 2018-06-19 11:13 GMT
வெம்பாக்கம் அருகே ததந்தை-மகனை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வெம்பாக்கம்:

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வடக்கல்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (வயது 58). இவரது மகன் சாந்தலிங்கம். சம்பவத்தன்று, சாந்தலிங்கம் தனது வீட்டு வாசலில் கட்டுமான பணிக்காக செங்கற்லை இறக்கி அடுக்கி வைத்து கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார், வாசு, ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 வாலிபர்களும் அங்கு வந்து சாந்தலிங்கத்திடம் வீண் தகராறு செய்தனர். தட்டிகேட்ட சாந்தலிங்கத்தை 3 பேரும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

மகன் தாக்கப்படுவதை பார்த்து ஓடி வந்த குமாரையும் 3 பேர் கும்பல் தாக்கினர். ஆத்திரமடங்காத கும்பல், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் குமாரையும், அவர் மகன் சாந்தலிங்கத்தையும் சரமாரியாக வெட்டினர்.

இதில் தந்தையும், மகனும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து தூசி போலீசில் புகார் அளித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சசிக்குமாரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய வாசு மற்றும் ஹரிகிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News