செய்திகள்
தருமபுரி அருகே கார் மோதி தொழிலாளி பலி
தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:
தருமபுரியை அடுத்த கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது45). தொழிலாளியான இவர் நேற்றிரவு தருமபுரியில் இருந்து கடகத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கடத்தூர் பிரிவு சாலையில் வந்த போது பாப்பாரப்பட்டி-தருமபுரி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நஞ்சப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நஞ்சப்பன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.