செய்திகள்

திருபுவனை அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-06-18 11:30 GMT   |   Update On 2018-06-18 11:30 GMT
திருபுவனை அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது72), விவசாயி. இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆனால் அவரிடம் குடும்பத்தினர் யாரும் பேசவில்லை. இதனால் கோபால் மனைஉளைச்சலில் இருந்து வந்தார். இதையடுத்து தற்கொலை செய்து கொள்ள கோபால் முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து நிலத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வயல்வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் இதனை பார்த்து கோபாலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News