செய்திகள்

வில்லியனூரில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்

Published On 2018-06-18 10:39 GMT   |   Update On 2018-06-18 10:39 GMT
வில்லியனூரில் மாயமான இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் ஆனந்தபுரம் பாரதிதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களது மகள் கிருத்திகா ( வயது 25) டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த கிருத்திகாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கிருத்திகா இல்லை. இதையடுத்து கிருத்திகாவின் பெற்றோர் தங்களது மகள் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான கிருத்திகா இன்று காலை அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரியும் தனது காதலன் சரவணன் (36) என்பவருடன் வில்லியனூர் போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது மைலம் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கிருத்திகா போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News