செய்திகள்

வள்ளியூரில் கணவர் வெளிநாடு சென்றதால் புதுப்பெண் மாயம்

Published On 2018-06-18 10:36 GMT   |   Update On 2018-06-18 10:36 GMT
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருமணம் ஆன 4 மாதத்தில் கணவர் வெளிநாடு சென்றதால் புதுப்பெண் மாயமானாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தோரணகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29), இவரது மனைவி விஜயா (25). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்த நிலையில் புது மாப்பிள்ளை பால கிருஷ்ணன், தனது மனைவியை தனது வீட்டில் விட்டு விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டார்.

புதுப்பெண் விஜயா தனது மாமனார் சுடலைமணி, மாமியார் ராஜாத்தி ஆகியோருடன் தோரணகுறிச்சியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமியார் வீட்டில் இருந்த விஜயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜயா பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது மாமியார் ராஜாத்தி வள்ளியூர் போலிசில் மருமகள் விஜயாவை காணவில்லை என்று புகார் செய்துள்ளார். அதன்பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் விஜயாவை தேடி வருகின்றார்கள். இவரது கணவர் 4 மாதத்தில் வெளிநாடு சென்ற வருத்தத்தில் காணாமல் போனாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News