செய்திகள்

காணியாளம்பட்டி பகுதியில் 19-ந்தேதி மின்தடை

Published On 2018-06-16 13:57 GMT   |   Update On 2018-06-16 13:57 GMT
காணியாளம்பட்டி பகுதியில் வருகிற 19-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
கரூர்:

கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சிவக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கரூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட காணியாளம்பட்டி துணை மின்நிலையத்தில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியபட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிகொடும்பு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.  

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News