செய்திகள்

தாடிக்கொம்பு அருகே குடிபோதையில் ஓட்டலில் தகராறு செய்த வாலிபர்

Published On 2018-06-16 11:17 GMT   |   Update On 2018-06-16 11:17 GMT
தாடிக்கொம்பு அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு அருகே கிழக்கு மீனாட்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் சின்னநாட்ராயன் (வயது18). அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இங்கு சாப்பிட வந்த சித்ரவேல் (23) என்பவர் குடிபோதையில் உணவு சரியில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு அங்கிருந்த டேபிள், சேர்களை உதைத்து சேதப்படுத்தினார்.

இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணியிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சித்ரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து குடிமகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வியாபாரிகளை அச்சுறுத்தி வருகின்றனர். சாப்பிட்டு விட்டு தகராறு செய்வது, அனைத்து கடைகளிலும் பணம் வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தர மறுக்கும் வியாபாரிகளிடம் தகராறு செய்து வருகின்றனர்.

இதனால் வியாபாரிகள் வேறு வழியின்றி பணம் கொடுத்து வருகின்றனர். எனவே போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இவ்வாறு சுற்றிதிரியும் குடிமகன்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News