செய்திகள்

கொடைக்கானல் அருகே மகனுக்கு மது கொடுத்ததை தட்டி கேட்ட தந்தை மீது கொலை வெறி தாக்குதல்

Published On 2018-06-09 11:52 GMT   |   Update On 2018-06-09 11:52 GMT
கொடைக்கானல் அருகே மகனுக்கு மது கொடுத்ததை தட்டி கேட்ட தந்தை மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருமாள்மலை:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தினகரன் (வயது 15). இந்த சிறுவனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, சுரேஷ் ஆகியோர் மது கொடுத்து குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

சிறுவன் மறுக்கவே அவனை திட்டியுள்ளனர். இது குறித்து தினகரன் தனது தந்தை சுப்பிரமணியிடம் கூறியுள்ளான். ஆத்திரமடைந்த சுப்பிரமணி அவரது உறவினர் தண்டாயுதபாணி ஆகியோர் ஏன் மது கொடுத்து சிறுவனை கெடுக்கிறீர்கள் என 2 பேரிடமும் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி மற்றும் சுரேஷ் பீர் பாட்டிலை எடுத்து சுப்பிரமணி மற்றும் தண்டாயுதபாணியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த 2 பேரும் கொடைக்கானல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துப்பாண்டி மற்றும் சுரேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News