செய்திகள்
தேமுதிகவில் புதிதாக விசாரணைக்குழு அமைப்பு: திருச்சி நடராஜன் தேர்வு
கட்சி வளர்ச்சி பணிக்காக திருச்சி வடக்கு மாவட்ட முன்னாள் தே.மு.தி.க. செயலாளர் நடராஜன் விசாரணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி வளர்ச்சி பணிக்காக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம், அமைப்பு ஏற்படுத்துதல் என பல நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் புதிதாக மாநில விசாரணைக் குழு என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் தலைவராக விஜயகாந்த் உள்ளார். செயலாளராக விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி வடக்கு மாவட்ட முன்னாள் தே.மு.தி.க. செயலாளர் நடராஜன் விசாரணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணைக்குழு கட்சி நிர்வாகிகள், மற்றும் புகார்கள் குறித்து விசாரித்து தலைமைக்கு தெரிவிக்கும். ஏற்கனவே அ.தி.மு.க.வில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 4 பேர் கொண்ட மனுக்கள் விசாரணைக்குழு அமைத்திருந்தார். தற்போது தே.மு.தி.க.வில் புதிதாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதை அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.