செய்திகள்
தமிழ் மக்களின் உணர்வுகளை மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் நசுக்க முடியாது - ராகுல்காந்தி
ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்று தூத்துக்குடி சம்பவம் குறித்து ராகுல்காந்தி டுவிட்டரில் தமிழில் கருத்து பதிவிட்டுள்ளார். #Thoothukudi #SterliteProtest #RahulGandhi
சென்னை:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துப்பாக்கிசூடு நடத்தியதற்கு நேற்றே டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அரசாங்கமே கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதத்துக்கு மிருகத்தனமான உதாரணம் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் தனது அடுத்த டுவிட்டர் கருத்தை தமிழில் இன்று பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். #Thoothukudi #SterliteProtest #SterliteKillings #Tuticorin #RahulGandhi