செய்திகள்
வத்தலக்குண்டு அருகே ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20 ஆயிரம் மோசடி
வத்தலக்குண்டுவில் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20 ஆயிரம் பணம் மோசடி செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருப்பவர் சடைமாயன். இவர் நேற்று மதுரை ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் தான் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். அதனையடுத்து ஏ.டி.எம். கார்டை சடைமாயன் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து பணம் வரவில்லை என கூறி விட்டு வாலிபர் சென்று விட்டார்.
ஆனால் அவர் சென்ற பிறகு ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சடைமாயன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருப்பவர் சடைமாயன். இவர் நேற்று மதுரை ரோட்டில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் தான் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். அதனையடுத்து ஏ.டி.எம். கார்டை சடைமாயன் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து பணம் வரவில்லை என கூறி விட்டு வாலிபர் சென்று விட்டார்.
ஆனால் அவர் சென்ற பிறகு ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சடைமாயன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.