செய்திகள்

தவளக்குப்பம் அருகே வி‌ஷப்பாம்பு கடித்ததில் மூதாட்டி பலி

Published On 2018-05-14 13:25 GMT   |   Update On 2018-05-14 13:25 GMT
தவளக்குப்பம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வி‌ஷப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகூர்:

தவளக்குப்பம் அருகே டி.என். பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சீவி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது65). நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல மகாலட்சுமி உணரவே எழுந்து பார்த்தார். அப்போது வி‌ஷப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் தூங்கி கொண்டிருந்த தனது மகன் கணேசனிடம் தகவல் கூறிய மகாலட்சுமி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கணேசன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகாலட்சுமியை தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News