செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

Published On 2018-05-11 11:44 GMT   |   Update On 2018-05-11 11:44 GMT
நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
நெல்லை:

நெல்லை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில் டிவிஎஸ் பயிற்சி மையம் மூலமாக ஐசிஐசிஐ வங்கிக்கு இருபாலரும் தேர்வு செய்யப்படவுள்ளனர். எல்-டி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு அதிகாரி பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்கான வளாகத்தேர்வு நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் நடைபெறுகிறது.

கலை, அறிவியல் படிப்பை முடித்த பட்டதாரிகளும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். 26 வயதுக்குள் இருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயதகவல் பதிவேடு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வரவேண்டும். பதிவு கட்டணம் கிடையாது. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களும் கலந்துகொள்ளலாம். இவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News