செய்திகள்

கொள்ளையர்கள் நகையை பறித்ததால் பெண் கீழே விழுந்து படுகாயம்

Published On 2018-05-07 09:47 GMT   |   Update On 2018-05-07 09:47 GMT
மதுரவாயல் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கொள்ளையர்கள் நகையை பறித்ததால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
போரூர்:

ஆவடி பக்தவச்சலபுரம் பிரகாசம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செண்பகவள்ளி (43). இவரது தாய் போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க செண்பகவள்ளி கணவர் ரவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செண்பகவள்ளி அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். செயினை கையால் பிடித்த செண்பகவள்ளி நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அவரது வலது கை முறிந்தது. பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த செண்பகவள்ளிக்கு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News