செய்திகள்
வேலூரில் காட்டன் சூதாட்டம் - 2 பேர் கைது
வேலூரில் காட்டன் சூதாட்டமாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், மே.2-
வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் நேற்று இரவு பழைய அரசு ஆஸ்பத்திரி அருகே ரோந்து சென்றார். அப்போது காட்டன் சூதாட்டமாடிய பட்டாபி, சபீர் அமீது (54) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.