செய்திகள்

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் மதிய உணவு சாப்பிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

Published On 2018-04-29 10:16 GMT   |   Update On 2018-04-29 10:16 GMT
மூன்றாவது அணி தொடர்பாக ஸ்டாலினை சந்தித்து பேச சென்னை வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். #ChandrashekarRao #MKStalin #ThirdFront

சென்னை:

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து இது தொடர்பாக அவர் கலந்து ஆலோசித்தார்.

இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்துவதற்கான சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் சென்ற அவர் அங்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

இதனை அடுத்து, சந்திரசேகர் ராவ் ஸ்டாலின் உடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாலினுடன், சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தினார். #ChandrashekarRao #MKStalin #ThirdFront
Tags:    

Similar News