செய்திகள்

உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்- டி.டி.வி.தினகரன்

Published On 2018-04-25 04:34 GMT   |   Update On 2018-04-25 04:34 GMT
கட்சிக்கு எதிராக கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன் என்று டி.டி.வி.தினகரன் பேசினார்.#AMMK #Dinakaran #Thivakaran
தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் வழக்கில் நிச்சயம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உளவுத்துறையை பயன்படுத்தி பல்வேறு தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். எனவே கட்சிக்கு எதிரான கருத்தை யாராவது பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்.

யாருக்கும், எதற்காகவும் பயந்து பின்வாங்க மாட்டேன். என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. உறவுகளையும், நட்பையும் மதிப்பவன் நான். விட்டில் பூச்சிகளைப்போல் துரோகிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். இணையதள பதிவு உண்மையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க போவதில்லை. அதே சமயம் காவிரி நீரை பெற்றுத்தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஜெயலலிதாவின் ஆட்சியை தொண்டர்கள் ஆதரவோடு விரைவில் அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். #AMMK #Dinakaran #Thivakaran
Tags:    

Similar News