செய்திகள்

மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2018-04-24 03:08 GMT   |   Update On 2018-04-24 03:08 GMT
மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல உள்ளார். #Edappadi #PMModi #CauveryIssue
சென்னை:

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.



பிரதமர் மோடியின் அழைப்பையடுத்து, மே 2-ல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Edappadi  #PMModi #CauveryIssue 
Tags:    

Similar News