தேனி அருகே பேரூராட்சி இயக்குனர் அலுவலகத்தில் கொள்ளை
தேனி:
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பாலாஜி நகரில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இதன் செயல் அலுவலராக சுப்பிரமணியம் உள்ளார். சம்பவத்தன்று மாலை பணிகள் முடிந்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்.
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆவணங்கள் சிதறி கிடந்தன. மேலும் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா டிஸ்க்கும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்து.
இது குறித்து சுப்பிரமணியம் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலுவலகத்தில் கொள்ளையடிக்க புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உள்ளே நுழைந்த நபர்கள் யார்? என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கேமராவின் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.