செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 ½லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-04-21 07:33 GMT   |   Update On 2018-04-21 07:33 GMT
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 5 ½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த மொய்தீன்கனி என்பவர் உடைமைகளை சோதனை செய்த போது அவர் அவரது உடைமைகளுக்குள் ரூ. 5.63 லட்சம் மதிப்புள்ள 179 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News