செய்திகள்

சிவகாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2018-04-21 07:11 GMT   |   Update On 2018-04-21 07:11 GMT
குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சுதா (வயது 27). கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்றும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த சுதா வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் கருகிய சுதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை சுதா பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News