செய்திகள்
அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது அரசு வழக்கு தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது அரசு வழக்கு தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மற்றும் எச்.ராஜா குறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு தெரியும். பேராசிரியை விவகாரத்தில் காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆளுநர் உத்தரவிட்டுள்ள விசாரணை, சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது. நிர்வாக விசாரணைக்கும் குற்றவியல் விசாரணைக்கும் தொடர்பு இல்லை.
அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #tamilnews
அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மற்றும் எச்.ராஜா குறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு தெரியும். பேராசிரியை விவகாரத்தில் காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆளுநர் உத்தரவிட்டுள்ள விசாரணை, சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது. நிர்வாக விசாரணைக்கும் குற்றவியல் விசாரணைக்கும் தொடர்பு இல்லை.
அவதூறு கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும். எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #tamilnews