செய்திகள்
திருவாடானை அருகே பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தொண்டி:
திருவாடானை அருகே உள்ள எல்.கே. நகரைச் சேர்ந்தவர் நீதி ஆனந்தன் (வயது 49). இவர் சின்ன கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
சம்பத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
மறுநாள் வீடு திரும்பிய நீதி ஆனந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ் வரி மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.